தமிழகத்தில் மின் இணைப்பு வீட்டு உபயோகத்திற்காக மின் இணைப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முதல் 100 யூனிட் இலவமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச மின்சாரத்தினால் அரசு பெரும் செலவு ஏற்படுவதாலும், இலவச மின்சாரம் பெறுவதற்கு தகுதியில்லாத நபர்கள் இதை தொடர்ந்து பயன்படுத்துவதாலும், தேவையானவர்களுக்கு நேரடியாக கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு இலவச மின்சாரம் பெறுபவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அறிவித்திருந்தது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆதார் எண்ணை இணைக்கதாவர்கள் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை. இதையடுத்து ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு தமிழக மின்வாரியம் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 24 முதல் நவம்பர் 30ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
